அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
சோதனை சாவடியில் ஆண்டிமடம் காவல்நிலைய ஆய்வாளர் திரு. குணசேகரன், உதவி ஆய்வாளர் திரு. சரத்குமார் மற்றும் காவலர்கள் தலைமையில் தீவிர
வாகன தணிக்கை செய்யப்பட்ட நிலையில் 10/06/2021 அன்று நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு வந்த TN 16 D 2297 டாரஸ் டிப்பர் லாரியில் pondy men’s choice 180 ml (61)பாட்டில்கள் கடத்தி வந்ததை கண்டறிந்தனர். வாகனத்தை இயக்கி வந்த ஆரோக்கியசாமி (47) மற்றும் ராஜேஷ் (28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை கைப்பற்றினார்கள். துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த ஆண்டிமடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. குணசேகரன் காவல் உதவி ஆய்வாளர் திரு.சரத்குமார் மற்றும் காவலர்களை பாராட்டு விதமாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பெரேஸ்கான் அப்துல்லாஹ் மாவட்ட காவல் அலுவலகத்தில் 12/06/2021 அன்று பாராட்டு சான்றிதழ் வழங்கி, ஊக்கத்தொகை அளித்து பாராட்டினார்கள். உடன் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர்
செல்வகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்

