தூத்துக்குடி-நாசரேத் திருமண் டல தேர்தல் அறிவிப்பு! ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது!
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது. தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல முதற்கட்ட தேர்தல் ஆகஸ்டு 15 ஆம் தேதி நடைபெறு கிறது.இதில் சபை பிரதிநிதிகள் மற்றும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.இரண்டாவது கட்ட மாக ஆகஸ்டு 28 ஆம் தேதி சேகர மன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சேகர செயலாளர், பொரு ளாளர் மற்றும் சபைமன்ற பிரதி நிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மூன்றாவது கட்டமாக செப் டம்பர் 18 ஆம் தேதி சபைமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.இதில் திருமண்டலத்திற்கு சபை மன்றத் திலிருந்து ஊழியர் பிரதிநிதிகள், மற்றும் நிலைவரக் குழுவிற்கான பிரதிநிதிகள் தேர்தல் நடக்கிறது.
இறுதிக்கட்டமாக அக்டோபர் 20, 21 ஆம் தேதிகளில் திருமண்டல பெருமன்றம் கூடி அலுவலக பிரதிநிதிகளான உபதலைவர், குருத்துவச் செயலர்,லே செயலர், திருமண்டல பொருளாளர் மற்றும் திருமண்டல கல்வி நிலைவரக்குழு செயலர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

