பேரிடர் காலமான இந்த கரோனா நோய்த் தொற்று பரவல் காலக்கட்டத்தில், மாணவ மாலிகள் பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று கல்வி கற்க இயலாத சூழ்நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இணைய வழி மூலம் முதல் பெரும்பாலான பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆன்வைன் மூலம் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களில் ஒரு சிலர் தகாத முறையிலும் பாலியல் தொந்தரவுகளை தரும் வகையிலும் இளம் பள்ளி மாணவிகளிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பெறப்பட்டுள்ள புகார்களை தொடர்ந்து, இது போன்ற செயல்கள் மத்திய மண்டலத்தில் நடைபெறாத வண்ணம் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாலியல்ரீதியான தொந்தரவுகளை போக்கிடும் வகையில் ஆன் லைன் மூலமாக பாடங்களை நடத்தும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுடன் பாலகிருஷ்னன், ஐ.பி.எஸ். 07.06.2021 அன்று காணொளிக் காட்சி மூலம் ஆலேசானைக் கூட்டம் நடத்தி பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தில் உள்ள சுமார் 255 பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இணைய வழி மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தும் அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி செயல்பட வேண்டுமென்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பள்ளிகளில் நடத்தப்பபடும் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரால் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினை சார்ந்த இரு நபர்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவியர்கள் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதாக அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்கள் பள்ளி நிர்வாகத்தினரால் மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் காவல்துறையால் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ மாணவிகள் எந்த வித அச்சமும் தயக்கமும் இன்றி ஆன்லைன் வகுப்புகளில் பயில்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆன்லைன் மூலம் பயிலும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பேரிடர் காலமான இந்த கரோனா நோய்த் தொற்று பரவல் காலக்கட்டத்தில், மாணவ மாலிகள் பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று கல்வி கற்க இயலாத சூழ்நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இணைய வழி மூலம் முதல் பெரும்பாலான பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஆன்வைன் மூலம் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களில் ஒரு சிலர் தகாத முறையிலும் பாலியல் தொந்தரவுகளை தரும் வகையிலும் இளம் பள்ளி மாணவிகளிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பெறப்பட்டுள்ள புகார்களை தொடர்ந்து, இது போன்ற செயல்கள் மத்திய மண்டலத்தில் நடைபெறாத வண்ணம் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பாலியல்ரீதியான தொந்தரவுகளை போக்கிடும் வகையில் ஆன் லைன் மூலமாக பாடங்களை நடத்தும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுடன் பாலகிருஷ்னன், ஐ.பி.எஸ். 07.06.2021 அன்று காணொளிக் காட்சி மூலம் ஆலேசானைக் கூட்டம் நடத்தி பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேற்கண்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தில் உள்ள சுமார் 255 பள்ளிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இணைய வழி மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தும் அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி செயல்பட வேண்டுமென்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பள்ளிகளில் நடத்தப்பபடும் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரால் முழுவதுமாக பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினை சார்ந்த இரு நபர்கள் மூலமாக குறிப்பிட்ட இடைவெளியில் அந்த பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவியர்கள் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதாக அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்கள் பள்ளி நிர்வாகத்தினரால் மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் காவல்துறையால் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ மாணவிகள் எந்த வித அச்சமும் தயக்கமும் இன்றி ஆன்லைன் வகுப்புகளில் பயில்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆன்லைன் மூலம் பயிலும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

