சென்னை கண்ணகி நகர் பகுதியில் பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய ஆறு நபர்களை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
கண்ணகி நகர் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சுனில் என்பவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டி குழுவினராக கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டிய தகவல் வீடியோ மூலம் கிடைத்த தகவலின் பேரில் பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டிய
1)சுனில்
2)நவீன்குமார் (எ) தொப்பை
3)அப்பு
4)தினேஷ்
5) ராஜேஷ்
6)கார்த்திக் (எ) பீடி
ஆகியோர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்

