மதுரையில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் மனிதநேயமிக்க இளைஞர் சரவணபாண்டி! நம்பிக்கை நமது அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு
————–
மதுரை மாவட்டம் மத்திய தொகுதியில் வசித்து வருபவர் சரவணபாண்டி இவர் ஒரு சிறந்த சமூக சேவகர் ஆவார் இவர் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். ஆனால் மனதளவில் மிகப்பெரிய வசந்த மாளிகைக்கு சொந்தக்காரர் என்று கூட அழைக்கலாம் அந்தளவிற்கு மனிதநேயமிக்க நபர் இவர் தான் வறுமையில் இருப்பினும் அதையும் பொருட்படுத்தாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு கொராணா ஊரடங்கு முதல் அலை காலகட்டத்திலிருந்து இருந்து இதுவரையிலும் தன்உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆதரவற்ற , வறுமையில் உள்ள ஏழை மக்களுக்கும், மனநல பாதிக்கப்பட்டவர்க்கு சாலையோரங்களில் பசியோடு படுத்துக்கிடக்கும் நபர்களை தேடி சென்று உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார் இதற்காக தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கடந்த 1 வருடங்களாக உதவி செய்து வருகிறாராம் பணம் காசு நாம் எப்போது என்றாலும் உழைத்து சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் இந்த பேரிடர் காலத்தில் உணவில்லாமல் ஒரு மனித உயிர் கூட போய்விடக்கூடாது என்பதே எனது லட்சியம் என்று உணவு இல்லாதவர்களை தேடி பிடித்து உதவி செய்து வருகிறார் மதுரை இளைஞர் சரவணபாண்டி! இவர் “வைகை உதவும் கரங்கள் “என்ற அமைப்பு பெயரில் தொடர்ந்து உணவுகள் வழங்கி வருகிறார்.

இவர் சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இவரது சேவையை பாராட்டி தமிழகத்தின் சிறந்த மருத்துவ அமைப்பான நம்பிக்கை நமது அமைப்பு இவரை கெளவரப்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது இவரது மனிதநேய பணி மதுரை மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்
செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து

