மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான
முனைவர் ஸ்ரீநாதா IPS தற்போது பணியிட மாற்றம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பிரிவு உபசார விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், தனிப்பிரிவு ஆய்வாளர், உதவி-ஆய்வாளர்கள் அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

