திருச்சிராப்பள்ளி மாநகரில் ர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை மையங்களில் திருச்சி மாநகர துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பவண்குமார் ரெட்டிமன்னார்புரத்தில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு முகக்கவசம் அணியாமல் வந்த 50-க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு சர்வதேச சுற்றுக்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தை வழியுறுத்தியும், மரம் வளர்பதை ஊக்கபடுத்தியும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கு முகக்கவசம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்கள். மேலும் 50-க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தாங்களாக முன்வந்து மரக்கன்றுகளைப் பெற்றுசென்றனர்.
பொதுமக்கள் தங்களால் முடிந்தவரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமெனவும், குறைந்தபட்சம் ஆண்டொன்றுக்கு ஒரு மரக்கன்றையானது நட்டு சுற்றுச்சூழலை பாதுக்காக்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொன்டுள்ளார்

