தென்காசி மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சுகுணாசிங் IPS தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பிரிவு உபசார விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் IAS கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலிவரதன், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


