தூத்துக்குடியில் 10 லட்சம் மதிப்பீட்டில் 500 பேருக்கு தலா 2000 ரூபாய் மதிப்பிலான 10 கிலோ அரிசி பை, மளிகை சாமான்கள் தொகுப்பு, காய்கறிகள், உள்ளிட்ட நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் இன்று காலை சிதம்பர நகர் 4 வது தெருவில் அமைந்துள்ள அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லப்பாண்டியன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
அதிமுக கழக ஓருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஓருங்கிணைப்பாளரும் சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி கடந்த 2020ம் ஆண்டு கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளிலும் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு 2 கோடி மதிப்பீல் அரிசி, பலசரக்கு, வாழைக்காய், தேங்காய், உள்ளிட்ட பொருட்களை ஆதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 60 வார்டு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று வழங்கினார்.
கொரோனா தொற்று முதல் அலையின் போது தூத்துக்குடி மாநகரம் முழுவதும் செல்லபாண்டியன் அவர்கள் செய்த உதவி இன்றுவரை மக்கள் அதை சொல்லிக்கொண்டு இருப்பது கேட்க முடிகிறது அந்த அளவிற்கு தனது சொந்த பணத்தில் தூத்துக்குடி மக்கள் ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு இவர் செய்த உதவி அந்த சமயத்தில் பேருதவியாக காணப்பட்டது

அதே போல் இன்றும் சிதம்பரநகரில் உள்ள அமைப்பு கழக அலுவலகத்தில் 10 கிலோ அரிசி பை 19வகையான மளிகை பொருள்களான துவரம்பருப்பு, கோதுமை மாவு ரவை புளி வத்தல் சீரகம் சோம்பு கடுகு வெந்தயம் காயம் மஞ்சள் மல்லித்தூள் பொரிகடலை உப்பு மிளகு பூண்டு சாம்பார் பொடி வத்தல் தூள் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் காய்கறிகள் தொகுப்புகளான கத்தரிக்காய் வெண்டைக்காய் மாங்காய் வெங்காயம் பல்லாரி தேங்காய் மிளகாய் முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு வாழைக்காய் தக்காளி கேரட் பீட்ரூட் ஆகிய காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது ஒரு குடும்பத்திற்கு தேவையான சமையல் பொருள்கள் அரிசி காய்கறிகள் என தலா ஒரு நபருக்கு ரூ2000 மதிப்பீலான நிவாரன பொருட்கள் வீதம் 500 பேருக்கு சுமார் பத்து லட்சம் மதிப்பீட்டில் நிவாரணப் பொருட்களை தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகளுக்கு ஆதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், அமைப்புச் செயலாளர் செல்லப்பாண்டியன் உதவியாளரும் மாவட்ட ஜெ பேரவை மூர்த்தி, மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சிவசுப்ரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், அன்புலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் சேவியர்ராஜ், தெற்கு பகுதி பொருளாளர் ராஜசேகர், வட்டசெயலாளர்கள் ஜெகதீஸ், மாடசாமி, செல்வராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் பெருமாள், மாரியப்பன், சீனிவாசன், ஹார்பர் பாண்டி, கோபி, சீனிவாசன், பூக்கடை வேலு, எஸ் ரமேஷ் கண்ணன் முருகன், கருப்பசாமி, கெய்னஸ், தமிழரசன், திருமணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், மனோகர், பொன்ராஜ், சகாயராஜ், முருகேசன், டேவிட்ஏசுவடியான், பிச்சையா, வட்ட பிரதிநிதிகள் அருண்குமார், அய்யப்பன், இசக்கிமுத்து, டைமன்ராஜ், பாண்டி, மாரியப்பன், அசரியான், பொன்னுத்துரை, ராஜ்குமார், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நகர கிளை பொருளாளர் சண்முகராஜ், ராஜேந்திரன், மகளிர் அணி திருமணி, மேரி, நிர்வாகிகள் சக்கையாநாடார், வேல்ராஜ், பால்ராஜ், ஜோதிகா மாரி, நயினார், சுப்புராஜ், ஆறுமுக நயினார், ராமகிருஷ்ணன், ராணி, நடராஜன், கணேஷ், ராஜா, டயோசீசன் உறுப்பினர் பிரபாகர், மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதியிலுள்ள 60 வார்டை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் தனது சொந்த பணத்தில் கடந்த ஆண்டு முதல் அலையின் போது ஏழை எளிய மக்களுக்கு செய்த உதவி போல் தற்போது 10 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகர அதிமுக நிர்வாகிகள் பலருக்கும் இவர் செய்து வரும் உதவிகள் இந்த தருணத்தில் பேருதவியாக உள்ளது என நிர்வாகிகள் பலரும் தெரிவித்தனர் அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லப்பாண்டியன் அவர்களே பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்
செய்தி தொகுப்பு எம் ஆத்தி முத்து

