தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகநேரியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். அருகில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்பிரியா அவர்கள், திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் அவர்கள், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் திரு. மரு.சம்பத் அவர்கள், கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் மரு. ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உள்ளனர்.

