சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் 29.5.2021 அரசு மதுபான கடையை உடைத்து 1.29 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது இதுதொடர்பாக காளையார்கோவில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின் பேரில்
தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் உதயகுமார்,
மேற்பார்வையில் மாவட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் ரஞ்சித், சுரேஷ்குமார் இவர்கள் தலைமையில் சிவகங்கை நகர காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், சார்பு ஆய்வாளர் வாசிவம், காளையார்கோவில் சார்பு ஆய்வாளர்கள் ராஜ்கமல்,
அன்சாரிஉஷேன், சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன், மற்றும் காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான மதுரையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26)
திருப்புவனம் பிரேம்குமார் (26)
கோமாளிபட்டி வெள்ளைச்சாமி (32)
கருங்குளம் கணேசன் (37)
திருபபுவனம் ராஜ்குமார் (23)ஆகியோரை கைது செய்தனர் அவர்களிடமிருந்த ரூ 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களும் கைப்பற்றினார் மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


