தேவகோட்டை அன்னை ஆம்புலன்ஸ் உரிமையாளர் துரை ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அன்னை ஆம்புலன்ஸ் உரிமையாளர் துரை மற்றும் அவரது நண்பர்கள் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்த நாள் முதல் தொடர்ந்து 20 நாட்களாக தேவகோட்டை அரசு மருத்துவமனை அருகில் மற்றும் நகர் பகுதிகளில் நேரடியாக சென்று ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றனர். உணவு வழங்கும் நிகழ்ச்சியில் நகர காவல் ஆய்வாளர் பேபி உமா பங்கேற்றார்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


