ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் முன்னிலையில் மருதூர் கீழ கால்வாயில் பாசனத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தண்ணீர் திறந்து விட்டார்
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் மருதூர் கீழ கால்வாயில் பாசனத்திற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலையில் மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி இன்று காலை 9 மணி அளவில் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ். பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் திமுக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.

