ஆறுமுகநேரிகாவல் நிலைய சரகம். ஆறுமுகநேரி பஜார் காயல்பட்டினம் சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோரது குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பாக திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷிங் ஐ.பி.எஸ் தலைமையில், ஆறுமுகநேரிகாவல் நிலைய ஆய்வாளர் திரு.செந்தில்குமார் , மற்றும் ஆறுமுகநேரிகாவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் கொரோனா நிவாரண பொருட்களான அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள் நேற்று வழங்கப்பட்டது.

