கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்பி கார்த்திக் வழங்கினார்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் துறை சார்பில் 50 ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினையும். 100 துப்புரவு பணியாளர்களுக்கு காலை நேர சிற்றுண்டியை மாவட்ட எஸ்.பி கார்த்திக் வழங்கினார்.
பின்னர் அபிராமம் காவல்துறை சார்பில் 100 ஏழை எளிய ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினையும், 200 நரிக்குறவ குடும்பத்தினருக்கு மதிய உணவும் வழங்கினார்.
கமுதி தனி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட எஸ்.பி கார்த்திக் ஏற்பாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி காவலர் மற்றும் காவலர் குடும்பங்களைச் சேர்ந்த 200 பேருக்கு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எஸ்.பி கார்த்திக் மாவட்டத்தில் காவலர் குடும்பங்களுக்கு ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 150 தடுப்பு ஊசி போடப்பட்டது. நேற்று 45 வயதுக்கு மேற்பட்ட காவலர் குடும்பங்களுக்கு போடப்பட்டு வருகிறது. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்

