திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். மேலும் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஐ.பி.எஸ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) வழங்கி வருகிறார்கள்.
இதனடிப்படையில் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தங்கள் கைககளை அடிக்கடி சுத்தம் செய்து நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பாக்கெட் சானிடைசர் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைவரும் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஐ.பி.எஸ் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சுப்பாராஜூ மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.

