செய்துங்கநல்லூர் அருகே கணவன் இறந்த மனவேதனையில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் மேலதூதுகுழியை சேர்ந்தவர் அருணாச்சலம் (75), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள் (58). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது இந்நிலையில் அருணாச்சலம் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் அவர் இறந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் முருகம்மாள் புலம்பியவாறு இருந்துள்ளார்.
இதில் மனமுடைந்து காணப்பட்ட முருகம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

