விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சங்கரலிங்காபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடோனில் புகையிலை பதுக்கி வைத்திருந்த நபர் கைது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காவலர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ரெட்டியபட்டி மேல தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் விஜயராஜ் என்பவர் நாகலாபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில் அவருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் 7சாக்கு பைகளில் ரூபாய் 71,000 மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து எதிரியையும் கைது செய்தனர்.
சிறப்பாக விரைந்து செயல்பட்டு புகையிலை பறிமுதல் செய்து எதிரியை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


