சாத்தான்குளம் அருகே உரக் கடை அதிபரின் மகனை வாளால் வெட்டி பூச்சிக்கொல்லி மருந்துகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் புகழேந்திர நாதன். இவர் அப்பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று அவரது மகன் தங்கமுருகன் (19) என்பவர் தனியாக இருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அவரை வாளால் வெட்டி கடையில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து அவர்களில் ஒருவனை பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை சாத்தான்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணைியல், அவர் வெள்ளூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் சுந்தர் (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். இதனிடையே கொள்ளையர்கள் வெட்டியதில் காயமடைந்த தங்க அருண் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். உரக் கடை அதிபரின் மகனை வாளால் வெட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

