• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டெர்லைடிற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ்.. 93 பேருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- 

policeseithitv by policeseithitv
May 22, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிபிஐ வழக்கு, பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்குகள் தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணமும், இவர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக கடந்த 2018 மே 22ல் நடந்த போராட்டத்தில் 13 போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதோடு பலர் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

 

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலைகான பணி நியமன ஆணை முதல்வர் ஸ்டாலின் மூலம் வழங்கப்பட்டது. போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது மூன்றாண்டு நிறைவடைய உள்ள நிலையில் நேற்று இந்த பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணாஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் அவர்களின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது.

மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்கள்.

Previous Post

திருப்பத்தூர் நகரில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Next Post

தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் 470 பேர் மீது நடவடிக்கை – 3 கார்கள், 5 ஆட்டோக்கள் உட்பட 372 வாகனங்கள் பறிமுதல் – ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வேண்டுகோள்

Next Post
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு

தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள் 470 பேர் மீது நடவடிக்கை - 3 கார்கள், 5 ஆட்டோக்கள் உட்பட 372 வாகனங்கள் பறிமுதல் - ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வேண்டுகோள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In