*தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.*
♻ *நாளை (22.05.2021) தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (21.05.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு. பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
♻ *தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு 144 குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டப்படி தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் கூட்டம் கூடுவதற்கோ, அத்தியாவசியத் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
♻ *இதனை முன்னிட்டு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 12 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 55 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
♻ *இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி திரு. கோபி, திரு. கார்த்திகேயன், திரு. இளங்கோவன், திருநெல்வேலி திரு. சீமைச்சாமி, கன்னியாகுமரி திரு. சுந்தரம், தென்காசி திரு. சுவாமிநாதன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி திரு. கணேஷ், விளாத்திக்குளம் திரு. பிரகாஷ், மதுவிலக்குப்பிரிவு திரு. பாலாஜி, மணியாச்சி திரு. சங்கர், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, கோவில்பட்டி திரு. கலைக்கதிரவன், நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு திரு. முருகவேல், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு திரு. பாரத், அருப்புக்கோட்டை திரு. சகாயஜோஸ், தேனி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. ஜெபராஜ், ஆயுதப்படை திரு. சிசில், கோயம்புத்தூர் மத்திய குற்றப்பிரிவு திரு. பார்த்திபன், சென்னை திரு. வீமராஜ், கன்னியாகுமரி திரு. பாஸ்கரன் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


