சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). காரைக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறார், இவரும், இவரது மனைவி கண்மணியும் துக்க நிகழ்வுக்காக வெளியூருக்குச் சென்றிருந்தனர், பின்னா்,மார்ச் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திரும்பியுள்ளனா்.அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 30 பவுன் நகைகள், நாலரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.6 லட்சம் பணம் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், தேவகோட்டை நகா் போலீஸாா் விசாரணை நடத்தினா். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின் பேரிலும் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சபாபதி அறிவுறுத்தலின்படி கண்ணங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் திருமுருகன் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் காவலர்கள் இளங்கோ, செந்தாமரைக்கண்ணன் ,சிலம்பரசன், ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில் தேவகோட்டை வீட்டை உடைத்து திருடிய கும்பல் என விசாரணையில் தெரியவந்தது அதில் திருப்பாச்சேத்தி
ஆவரங்காடு விஜயன் மற்றும் சிவகங்கை தாலுகா கீழக்கண்டனி அழகர்சாமி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


