இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைககு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கொரானா நோயாளிகளுக்கு தேவையான மருந்து மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புதுவாழ்வு நலச்சங்க அறக்கட்டளை மூலம் ரூபாய் 5.00 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் வழங்கினார்கள் திருச்செந்தூர் நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் ஹர்ஸ் சிங், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி தன பிரியா, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புதுவாழ்வு நலச்சங்க அறக்கட்டளை மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் கெயின்ஸ் வெஸ்லி, மக்கள் தொடர்பு அலுவலர் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சாந்தகுமார் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 16.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது

