தூத்துக்குடியில் உடல் நலக்குறைவால் வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் என்பவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தங்கசீலன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வட்டங்களில் வட்டாச்சியராக பணிபுரிந்து வந்தார். இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
அவரது உடல் காலை கோரம்பள்ளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராஜ்குமார் தங்கசீலன், தூத்துக்குடியில் மூத்த பத்திரிக்கையாளரும், வழக்கறிஞருமான காமராஜின் நெருங்கிய உறவினர் ஆவார்.

