கொடைக்கானலில் கொரோனா குறித்து போலீசார் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையில் போலீசார் விழிப்புணர்வு நடத்திவந்த நிலையில் நேற்று நூதன முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று கையில் குளுக்கோஸ் பாட்டிலை வைத்தபடி உலா வந்தார். மேலும் அவர் தன்னை கொரோனா நோயாளி என்று சொல்லியபடி, தனக்கு உதவுங்கள் என்று சாலையில் திரிந்த பொதுமக்களிடமும், வாகனங்களில் சென்றவர்களிடமும், கடையில் அமர்ந்திருந்தவர்களிடம் கூறினார்.
மேலும் அந்த வாலிபருக்கு பின்னால் போலீசார் கொரோனா நோயாளியை பிடியுங்கள், அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்துவிட்டார் என்று கூறியபடி துரத்தி வந்தனர். இதை கேட்ட பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
இதனால் கொடைக்கானல் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஓட்டம் பிடித்த பொதுமக்களை அழைத்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் , கொடைக்கானல் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த், மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றும், கொரோனா நோயாளி போன்று சித்தரிக்கப்பட்ட வாலிபரை கண்டு அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்தனர். அப்போது தான் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், கொடைக்கானலில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினோம். எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். கடை, மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிவதும் அவசியம். காலை 10 மணிக்கு மேல் சாலையில் நடமாட கூடாது என்றனர்.
இதேபோல் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியிலும் போலீசார் இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். கொரோனோ தொற்றுகளில் இருந்து கொடைக்கானல் மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என கொடைக்கானல் போலீஸ்சார் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் எடுத்து வரும் ஒவோரு செயல்பாடுகளை மனதில் கொண்டு காவல்துறையின் அறிவுரைப்படி கொடைக்கானல் மக்கள் செயல்பட வேண்டும் எனக் கூறப்பட்டது காவல்துறையினர் நூதன முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது கொடைக்கானல் மக்கள் அனைவரும் கொடைக்கானல் டிஎஸ்பி ஆத்மநாதன் மற்றும் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் உங்கள் அனைவரையும் மனதார பாராட்டி வாழ்த்தினார்கள் செய்தி தொகுப்பு கொடைக்கானல் தாலுகா நிருபர் ஐ எஸ் மோகன்

