தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது – எதிரிகளை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
♻ *கோவில்பட்டியில் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு திரு. தங்கராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. மாதவராஜா, திரு. சிவராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, தலைமைக் காவலர் திரு. முருகன், காவலர்கள் திரு. ஸ்ரீராம் மற்றும் திரு. உலகநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.* <br>
<br>
♻ *அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் நேற்று (13.05.2021) தீவிர ரோந்து மேற்கொண்டதில் கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் மருந்தக உரிமையாளர்களான கோவில்பட்டி காந்தி நகர், நேரு நகரைச் சேரந்த ஆறுமுகநயினார் மகன்களான சண்முகம் (27) மற்றும் அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோர் சட்டவிரோதமாக ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதற்காக மேற்படி மருந்தகத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படையினர் சண்முகம் மற்றும் கணேசனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ரெம்டெசிவர் மருந்தை திருநெல்வேலி மற்றும் மதுரையிலிருந்து கள்ளச்சந்தையில் வாங்கி அதை சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டத்திற்கு அதிக லாபத்திற்காக சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் ஒரு ரெம்டெசிவர் குப்பி ரூபாய் 20,000/-ற்கு மேல் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி தனிப்படையினர் சண்முகம் மற்றும் கணேசனை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் 2,20,800/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் குப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*
♻ *மேற்படி எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 46 குப்பி ரெம்டெசிவிர் மருந்தை கைப்பற்றிய தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.*<br>

