தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது.
அதன்பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் கண்காணிப்புக் குழுவினா் 2 முறை ஆலையில் ஆய்வு மேற்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனா். இதையடுத்து, ஆலையின் ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவில் ஏற்கெனவே பணியிலிருந்த 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுவந்தனா். இந்நிலையில், ஸ்டொ்லைட் ஆலையில் புதன்கிழமை இரவில் ஆக்சிஜன் உற்பத்தி முழுமையாக தொடங்கியது.
உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன், ஆய்வுக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அது 98 சதவீதம் சுத்தமானதாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நேற்று காலை லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தொடா்ந்து, உற்பத்தி அளவை அதிகரிக்க உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் 35 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு கரணமாக ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளாக ஆலை செயல்படாததால் சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

