தூத்துக்குடியில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் கரோனா நிவாரணமாக அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதும் முதல் உததரவில் கையெழுத்திட்டார். மேலும் இதில முதல் தவனையாக ரூ.2ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் கடந்த 10-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து இத்திட்டத்திற்காக ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், ஆனந்தசேகரன், ஜீவன் ஜேக்கப் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

