நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.
சீமானின் தந்தை செந்தமிழன் சொந்த கிராமமான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் உயிர் துறந்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை, அப்பா செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. . தந்தையை இழந்து வாடும் சீமானுக்கு அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் சீமான் மற்றும அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

