தமிழக சட்ட மன்றத்திற்கு கடந்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணும் பணி கடந்த 2ம் தேதி நடைபெற்றது. அதில் திமுக தனியாகவே 125 இடங்களிலும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 159 இடங்களை பிடித்து அமோகமாக வெற்றி பெற்றது. அதிமுக எதிர்கட்சியாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதிமுக தனியாக 65 இடங்களையும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 75 இடங்களை பிடித்தது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமைந்துவிட்ட நிலையில் எதிர்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதில் அதிமுக தரப்பில் குழப்பம் நீடித்தது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரில் ஒருவர் எதிர்கட்சி தலைவராக வரவேண்டும் என்பதில் இரண்டு பேருமே அந்த பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர். அதில் பிடிவாதமாக இருந்தனர்.
இந்தநிலையில் இன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நீண்ட விவாதத்திற்கு நடுவில் எடப்பாடி பழனிச்சாமியே எதிர்கட்சித் தலைவர் என முடிவு செய்யப்பட்டது. அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிக்கிறது. முழுவிபரம் மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவிக்கும் முன்பாகவே ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தைவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிட தக்கது.

