தூத்துக்குடியில் துடிசியா மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் வருகிற 12ம் தேதி இலவச கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக துடிசியா தலைவர் நேரு பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கமான துடிசியாவும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையமும் இணைந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் 12.05.2021 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் முத்தம்மாள் காலனி ராம்நகரில் உள்ள துடிசியா அரங்கத்தில் வைத்து கரோனா தடுப்பூசி முகாமினை நடத்தவுள்ளது.
கரோனா பெறுந்தொற்று அதிகம் பரவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு அங்கீகாரம் பெற்ற கரோனா தடுப்பூசி போடும் முகாமானது நடைபெறவுள்ளது. இம்முகாமில் 45 வயதிற்கு மேற்பட்ட மற்றும் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களையும் தங்கள் குடும்பங்களையும் இந்த கொடிய நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. நோய் மேலும் பரவாமல் இருக்கவும் நோயின் தாக்கத்தைகுறைக்கவும் தடுப்பூசி நமக்கு வரப்பிரசாதமாக அமைகிறது.
ஆகவே இம்முகாமில் கலந்துகொண்டு நோயை வென்று தேசத்தைக் காப்போம். பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய சந்தர்பத்தினை எளிதாக பயன்படுத்திககொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அவசியம் தங்களின் ஆதார் அட்டையை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு துடிசியா அலுவலகத்தில் அல்லது 9443121185, 9443136469, 9791423277 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என துடிசியா தலைவர் மு.நேரு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

