விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ளபடி இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
நாளை 10.05.2021 முதல் 24.05.2021 வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அறிவுரையின்படியும் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் உள்ள காவல் ஆய்வாளர்கள் அனைத்து வணிகர் சங்கங்கள், ஓட்டுனர் சங்கங்கள், காய்கறி வியாபாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார்கள். அப்போது வியாபாரிகள் அனைவருக்கும் முழு ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


