தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் துரைச்சாமிபுரம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 25 முதல் 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்பு – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட துரைசாமிபுரம் காட்டுப் பகுதியில் சுமார் 25 முதல் 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விளாத்திகுளம் காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு, விளாத்திகுளம் காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் தருவைகுளம் (பொறுப்பு) காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து அடையாளம் காணவும், அவர் கொலை செய்த காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இறந்தவர் இடது கால் சுண்டு விரல் மற்றும் அதன் அருகில் உள்ள விரல் முன்னும் பின்னுமாக உள்ளது. காலில் கொலுசு, கால் விரலில் மெட்டி காணப்படுகிறது, கழுத்தில் தாலி, இரட்டைச் சடை போடப்பட்டுள்ளது, மஞ்சள் நிற சேலை அணிந்துள்ளார், கருப்பு நிற முக கவசம், சில்வர் நிற சிறிய சாவியும் உள்ளது. இறந்தவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் விளாத்திக்குளம் காவல் துணை போலீஸ் சூப்பிரன்டு பிரகாஷ் அலைபேசி எண் 94434 46009, விளாத்திக்குளம் குற்றப்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) தருவைக்குளம் காவல் நிலையம் முருகன் அலைபேசி எண். 94981 94400, தருவைக்குளம் காவல் ஆய்வாளர் திரு. சரவணன் அலைபேசி எண் 94981 07200 மற்றும் தருவைக்குளம் காவல் நிலைய தொலைபேசி எண் 0461 – 2277270 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

