கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மற்றும் காவல் அதிகாரிகள் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்
சென்னை பெருநகர காவல், அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் (த.கா.17990) கருணாநிதி, வ/48, என்பவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அயல்பணியில் பணிபுரிந்துவந்த நிலையில், தலைமைக் காவலர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல், 13.04.2021 அன்று அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனளிக்காமல் தலைமைக் காவலர் கருணாநிதி இன்று இறந்தார். இவருக்கு சுந்தரவள்ளி, பெ/வ.42 என்ற மனைவியும், சாய்கிஷோர், வ/15 என்ற மகனும் உள்ளனர்.
இன்று கோட்டூர்புரம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இறந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு மறைந்த தலைமைக் காவலர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், தலைமைக் காவலரின் குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

