திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகள் மாரியம்மாள் (19) அவர்கள் கடந்த 21.04.2021 அன்று கீழே கிடந்த 58 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை முக்கூடல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின் காவல்துறையினர் விசாரணை செய்து பணம் மற்றும் செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்தனர். இத்தகவலை அறிந்த கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளர் சுவாமி கங்காதரானந்தா அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடர்பு கொண்டு பெண்ணிற்கு அன்பளிப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அவர்களை வரவழைத்து அப்பெண்ணிண் நேர்மை குணத்தைப் பாராட்டி சுவாமி கங்காதரானந்தா அவர்கள் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை அணிவித்து,10 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாக அளித்தார்.


