தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (22.4.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் நாளை (22.4.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வார்டு எண் – 54, தங்கம்மாள்புரம் பள்ளிக்கூடம், வார்டு எண் – 35, அசோக் நகர் – 5வது தெரு, வார்டு எண் – 18, இந்திரா நகர், காலை 11 மணிமுதல் 1 மணி வரை வார்டு எண்: 54, சுந்தர் நகர் (பார்க்), வார்டு எண்: 3, பாரதி நகர் – 5 வது தெரு (பார்க்), வார்டு எண்: 5, முத்தம்மாள் காலனி – 3 வது தெரு (பார்க்),வார்டு எண்: 13,பொன் நகரம் காளிஅம்மன் கோவில் தெரு, வார்டு எண்: 39, ரஹமத்துல்லாபுரம் (அங்கன்வாடி மையம்), பகல் 2 மணி முதல் 4 மணி வரை வார்டு எண்: 56, வுனுவுயு பள்ளி (அத்திமரப்பட்டி சர்;ச் அருகில்),வார்டு எண்: 34, ஆசிரியர் காலனி – 7 வது தெரு (கோவில் அருகில்), வார்டு எண்: 10, சுந்தரவேல்புரம் – 5 வது தெரு, வார்டு எண்: 24, பெரியகடை தெரு (மாதா கோவில் அருகில்), வார்டு எண்: 2 விஸ்வபுரம் (பத்திரகாளி அம்மன் கோவில் தெரு), வார்டு எண்: 14,ராஜமன்னார் தெரு (பத்திரகாளி அம்மன் கோவில் அருகில்), வார்டு எண்: 43, பிரையண்ட் நகர் – 2வது தெரு (TDTA பள்ளி),
கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வள்ளுவர் நகர் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை வீரவாஞ்சி நகர் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை வ.உ.சி நகர் பகுதியிலும், காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை சிங்கிதுறை பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை உச்சிமாகாளிஅம்மன் கோவில் தெரு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.
தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை நடு வாகைக்குளம், தவசியாபுரம், தஞ்சைநகரம், சிறுநாடார் குடியிருப்பு, தாங்கை கைலாசபுரம், கோட்டார்விளை (குரும்பூர்), கொங்கராயகுறிச்சி, பழைய காயல்முத்துநகர், வீரபாண்டியபட்டிணம், கீழபுத்தனேரி, அங்கமங்கலம், 11 மணிமுதல் 1 மணி வரை வர்த்தகரெட்டிபட்டி, சத்யாநகரம்,
ஆலன்கிணறு, வீரப்பநாடார் குடியிருப்பு, புதுமனை (உடன்குடி), மழவராயநத்தம், காசிலிங்கபுரம் , சிர்கோனியம் டவுண்சிப், ஜே ஜே நகர், குமாரபுரம், திருச்செந்தூர், சென்னல்பட்டி, புன்னக்காயல், 2 மணிமுதல் 4 மணி வரை கட்டாலன்குளம், விஜயனூர், வேலாயுதபுரம், ராமசுப்பிரமணியபுரம், கல்லாமொழி, தைக்கா தெரு, ஆழ்வார்திருநகரி, தெய்வசெயல்புரம் ராமசந்திராபுரம், அழகாபுரி, ஆறுமுகநேரி, வீரபாண்டியபட்டிணம், யாதவர் தெரு, வசவப்பபுரம், கடையனோடை ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.
கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை ராஜாபுதுக்குடி, அய்யனார் ஊத்து, செவல்பட்டி, கழுகாசலபுரம், ஓ.லட்சுமிநாராயண புரம், முத்துசாமிபுரம், ராமசந்திரபுரம், மேலநம்பிபுரம், குதிரைகுளம், குமரெட்டியாபுரம் லெட்சுமிபுரம், சிந்தாமணிநகர், 11 மணிமுதல் 1 மணி வரை தெற்கு மயிலோடை, பணிக்கர்குளம், கோவிந்தம்பட்டி, குமரெட்டியாபுரம், குறளையம்பட்டி சென்னமரெட்டிபட்டி, குன்ஜெயபுரம், பொன்னையாபுரம், ஜம்புலிங்கபுரம், விட்டிலாபுரம், நாலாட்டின்புதூர், வடக்கு திட்டங்குளம், 2 மணிமுதல் 4 மணி வரை சவலாப்பேரி, வெள்ளாளன்கோட்டை, தீத்தாம்பட்டி, சொக்கலிங்கபுரம், இலந்தைகுளம், மடத்துபட்டி, பச்சையாபுரம், கீழநம்பிபுரம், ஓம் சரவணபுரம், மீனாட்சிபுரம், இனாம் மணியாச்சி, கடலையூர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

