ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது :கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு கூறியுள்ளவாறு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுரங்கங்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளில் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
கனரக வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பாக வாகனத்தை இயக்க அறிவுறுத்தவும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் சானிடைசர் உபயோகித்தல் கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு கூறப்பட்டது.
கனரக வாகனங்கள் நெரிசலான பகுதிகளில் நிறுத்துவதை தவிர்த்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்த வேண்டும் .
வளைவுகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில், சாலைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வேகத்தடைகள் அமைத்து விபத்துக்கள் நேர்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார்
விபத்து இல்லாத மாவட்டமாக மற்ற அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்
ஆலோசனை கூட்டத்தில் அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.பிரபாகர் , அரியலூர் தமிழ்நாடு அரசு பேருந்து அலுவலர் , ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் , சிமென்ட் ஆலையின் மக்கள் தொடர்பு அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், கனரக ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது :கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு கூறியுள்ளவாறு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுரங்கங்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளில் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
கனரக வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பாக வாகனத்தை இயக்க அறிவுறுத்தவும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் சானிடைசர் உபயோகித்தல் கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு கூறப்பட்டது.
கனரக வாகனங்கள் நெரிசலான பகுதிகளில் நிறுத்துவதை தவிர்த்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்த வேண்டும் .
வளைவுகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில், சாலைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வேகத்தடைகள் அமைத்து விபத்துக்கள் நேர்வதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார்
விபத்து இல்லாத மாவட்டமாக மற்ற அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டார்
ஆலோசனை கூட்டத்தில் அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.பிரபாகர் , அரியலூர் தமிழ்நாடு அரசு பேருந்து அலுவலர் , ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் , சிமென்ட் ஆலையின் மக்கள் தொடர்பு அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறையினர், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், கனரக ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.



