தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 1422 பேர்களுக்கு ரூ.2,84,400 அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500/- அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.04.2021) ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 447 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 150 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 112 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 60 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 157 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 293 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 132 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 71 பேர் மீதும் என மொத்தம் 1422 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 2,84,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 2 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 7 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 2 பேர் மீதும் என மொத்தம் 17 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 8,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

