சுற்றுலா தலமான கொடைக்கானலில் மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு அரசு சில தளர்வுகள் உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி கொடைக்கானல் மக்கள் ஒன்று திரண்டு எழுச்சி போராட்டம் நடத்தினர்.
கொரோனோ நோய் தொற்று தற்பொழுது தீவிரமடைந்திருக்கும் சூழ்நிலையில் நோய்த்தொற்றின் எதிரொலியாக வருகின்ற 20 ஆம் தேதி முதல் சுற்றுலா தளங்ககளுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளுக்கு
விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும் சுற்றுலாவை நம்பி 80% மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வரும் நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக
கொடைக்கானல் பல்வேறு துயரத்துக்கு உள்ளாகி வருகின்றன குறிப்பாக கடந்த ஆண்டு சீசன் டைம் களில் கொரனோ தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுக்கு வருவதற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் சுற்றுலா தலங்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது அதற்கு முந்தைய ஆண்டு கொடைக்கானலில்
ஆயிரக்கணக்கான தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் முந்தைய ஆண்டும் முற்றிலும் வரவில்லை இரண்டு ஆண்டுகளாக பாதிப்புக்கு உள்ளாகி வரும் கொடைக்கானல் மக்களுக்கு மேலும் ஒரு சோதனை காலமாக.வருகிற 20-ஆம் தேதி முதல் சுற்றுலா தளத்திற்கு தடை என அரசு அறிவித்ததால் இப்பகுதி மக்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது
சுற்றுலா தொழிலை நம்பி 80% மக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக அரசின் இந்த அறிவிப்பால் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது
எனவே கொடைக்கானல் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இன்று( 19/04/2021)காலை 11 மணியளவில் சுமார் ஆயிரம் பேர் முக கவசம் அணிந்து மூஞ்சிகல் பேருந்து நிலையத்தில் முன்பு போராட்டத்தில் குதித்தனர்
லேக் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள்
வாழ்வாதாரத்தை மீட்டெடுப்போம்….
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்
இதுவரை நடந்திராத வகையில் பல்வேறு அரசியல் கட்சி அமைப்புகள் வியாபாரிகள் பல்வேறு சமூக அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய போராட் டமாக இந்த போராட்டம் காணப்பட்டது
தமிழக அரசு e பாஸ் முறையில் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் இதனால் இதனை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் பலருடைய வாழ்க்கை பாதுகாக்கப்படும் இந்த போராட்டத்தினால் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரண்ட மக்கள் கூட்டத்தின் காரணமாக போக்குவரத்து முழுதுமாக ஸ்தம்பித்தது கொடைக்கானல் டிஎஸ்பி ஆத்மநாதன், காவல் ஆய்வாளர் முத்து பிரைம் சந்த் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது
கொடைக்கானல் மக்களின் இந்த போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க் கும் என அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கிறார்கள்
இந்த போராட்டத்தில்
கலந்து கொண்டவர்களில் தண்டனை குரலாக ஒலித்தது என்னவென்றால் அரசு செவிசாய்க்க விட்டால் கொடைக்கானல் மக்கள்
வாழ்வாதாரமே நாசமாகிவிடும் குழந்தைகளுக்கு சரியான உணவுகள் கொடுக்க முடியாது
குடும்பத்தை சரிவர நடத்த முடியாது வாங்கிய கடன்களை கட்ட முடியாது என தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
அனைத்து டாக்ஸி ஓட்டுனர்கள் சுற்றுலா வழிகாட்டிகள் வர்த்தக சங்கத்தினர் ஹோட்டல் உரிமையாளர்கள் ஹோட்டல் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடினர்
இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் அரசின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் செய்தி தொகுப்பு
கொடைக்கானல் வி ஆனந்த்


