தமிழக காவல்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் தன் குடும்பத்தை காட்டிலும் மக்கள் நலனே முக்கியம் என்ற குறிக்கோளோடு நேர்மையாக பணியாற்றும் நமது காவல்துறை அதிகாரிகள் பலரின் சீர்மிகு பணிகள் தான் தமிழக காவல்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது. அந்த வரிசையில் பாப்பாரப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் கோ,பெருமாள். இவரின் அதிரடி நடவடிக்கைகள் ஒரு படி மேலே அமைந்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது
நம் நாட்டில் எத்தனையோ துறைகள் இருந்தாலும் அத்தனை துறைகளிலும் முதன்மையாக விளங்கும் துறைதான் தமிழக காவல்துறை, அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம், மற்றும்,பொது நல அமைப்புகளின் நிகழ்சிகள் என்று அத்தனை நிகழ்ச்சிகளிலும் தன் இன்பம் மறந்து கண்ணியமுடன் காவல்துறை துடிப்புமிக்க அதிகாரிகள் இரவு பகல் என்று பாராமல் கண்விழித்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் நலன் ஒன்றையே பெரிதெண எண்ணி செயல் படும் நமது தமிழக காவல்துறையில் பணியாற்றும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் வரிசையில் பணிபுரிபவர்தான்,கோ,பெருமாள் உதவி ஆய்வாளர் இவர் தற்பொழுது , தருமபுரி மாவட்டம் , பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணி புரிந்துவருகிறார்
,எப்பொழுதும் சுறுசுறுப்பு, அதே சமயத்தில் புகார் மனுக்கள் கொண்டு காவல் நினைத்து வருபவர்களிடம் கனிவாகவும் சகோதரர் சகோதரிகள் உட்கார வைத்து பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டு வருகிறார். புகார் கொடுத்தவருக்கும்,புகாருக்கு ஆளானவருக்கும், நீதி வழங்குவதில் பாரபட்சமின்றி செயல்படக்கூடிய அதிகாரி என பொது மக்களே உதவி ஆய்வாளர் பெருமாள் அவர்களை பாராட்டுவதை காதால் கேட்க முடிகிறது
காவல் உதவி ஆய்வாளர் கோ,பெருமாள் அவர்களிடத்தில் புகார் கொடுத்தால், 24 மணி நேரத்தில்,புகார் கொடுத்தவரின் புகார் மீது நடவடிக்கை எடுப்பது ,கோ,பெருமாள்,அவர்களின் தனி சிறப்பாகும், இவர் பணி செய்த எல்லா காவல் நிலையத்திலும் இவரது அதிரடி நடவடிக்கை கண்டு அங்குள்ள பொதுமக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார்
இந்த ஒராண்டில் மட்டும், பாப்பாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு,தொந்தரவு கொடுத்து வந்த இரண்டு நபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார், காணாமல் போன நபர்கள் ஆறு பேரை கண்டுபிடித்து உறவினர்களிடம் சேர்த்தார்,அடிதடி வழக்குகளில் பலரை கைதுசெய்து ரவுடிகளின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் . இந்தப் பகுதியில் அடிக்கடி கலவரம் நிகழும் என்று ஹிட் லிஸ்டில் உள்ள பகுதி இதற்குத் தீர்வு காணும் வகையில் கலவரம் நடக்காமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார், அதுபோல் பாப்பாரப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு முடிவு கட்டும் வகையில் பல கஞ்சா வியாபாரிகளை கைது செய்தார். மேலும் கஞ்சா பயிரிட்டவரை கைது செய்து .இந்த பகுதியில் கஞ்சா இல்லாதவாறு அடியோடு ஒழித்தார் ,இதுபோல் எப்பொழுதும் , மக்களின் நன்மை ஒன்றையே பெரிதென,எண்ணி செயல் பட்டு வரும்,கோ,பெருமாள்,அவர்கள் , இந்த இளம் வயதில் தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கியது வருங்காலத்தில் பதவி உயர்வு பெற்று மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும் தமிழக காவல்துறையின் சிகரமாக விளங்க வேண்டுமென போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் வாழ்த்துவதோடு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து உதவி ஆய்வாளர் பெருமாள் அவர்களுக்கு போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி சார்பில் ராயல் சல்யூட்
செய்தி தொகுப்பு
எம் கோபால் தர்மபுரி போலீஸ் செய்தி செய்தியாளர்

