திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சுப்பிரமணியன் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ம்தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். பணியில் இருக்கும்போதே இறந்து விட்டதால் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதனை இன்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெ.மணிவண்ணன் 3 லட்சத்திற்கான காசோலையை சுப்ரமணியன் அவர்களின் மனைவி வசந்தகோமதி அவர்களிடம் வழங்கினார்.

