மாவட்ட காவல் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்த திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வண்ணம் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் நலனில் அக்கறை கொண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்ட காவல் அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களும் கபசுரகுடிநீர் அருந்தி கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி நடக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

