• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது எஸ்.பி நடவடிக்கை

policeseithitv by policeseithitv
April 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் – தமிழக அரசு உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 2461 பேர் மீது நடவடிக்கை- ரூபாய் 4,92,200/- பணம் அபராதம் – சமூக இடைவெளியை கடைபிடிக்காத 52 பேர் மீது நடவடிக்கை – ரூபாய் 26,000/- அபராதம் – பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், நம்மையும், நம் சமூகத்தையும் பாதுகாத்து அபராதம் செலுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500/- அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத 572 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 212 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 258 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 200 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 261 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 401 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 387 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 170 பேர் மீதும் என மொத்தம் 2461 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 4,92,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி மாநகரததை சுற்றியுள்ள பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 6 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 பேர் மீதும் என மொத்தம் 52 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 26,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எந்தெந்த வழிகளிலெல்லாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ, அத்தனை வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனையோ விழிப்புணர்வு கொடுத்தாலும் சிலர், அதனை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு செயல்படுவதால் இதன் தாக்கம் மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டேதான் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து நம்மையும், நம் சமூகத்தையும் பாதுகாத்து மேற்கண்டவாறு அபராதம் செலுத்துவதையும் தவிர்க்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தூத்துக்குடி மாநகரததை சுற்றியுள்ள பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் ஒருவர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 5 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 3 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 6 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 3 பேர் மீதும் என மொத்தம் 52 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 26,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எந்தெந்த வழிகளிலெல்லாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமோ, அத்தனை வழிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனையோ விழிப்புணர்வு கொடுத்தாலும் சிலர், அதனை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு செயல்படுவதால் இதன் தாக்கம் மேலும், மேலும் அதிகரித்துக்கொண்டேதான் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து நம்மையும், நம் சமூகத்தையும் பாதுகாத்து மேற்கண்டவாறு அபராதம் செலுத்துவதையும் தவிர்க்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Post

குளச்சல் ஏ.எஸ்.பி போக்குவரத்து காவல்துறையினருக்கு பழச்சாறு, பழங்கள் வழங்கினார்

Next Post

தொலைந்துபோன 7 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் மீட்கபட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தகவல்

Next Post
தொலைந்துபோன 7 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் மீட்கபட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தகவல்

தொலைந்துபோன 7 லட்சம் மதிப்புள்ள 77 செல்போன்கள் மீட்கபட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி தகவல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In