வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், தேர்தல் செலவின பார்வையாளர் (Expenditure Observer) திரு. குந்தன் யாதவ் I.R.S அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு இன்று (01.04.2021) தேர்தல் செலவின பார்வையாளர் (Expenditure Observer) திரு. குந்தன் யாதவ் I.R.S அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கி மெயின் ஆர்ச், டி.பி ரோடு, வேலந்தம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச் வழியாக ராஜ் மஹாலில் வந்து கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து திருச்செந்தூர் ராஜ்மஹாலில் வைத்து தேர்தல் செலவின பார்வையாளர் (Expenditure Observer) திரு. குந்தன் யாதவ் I.R.S அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வின்போது திருச்சந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி திரு. ஏ.கே. லேம்கான், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சஞ்சீவ் குமார், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில் குமார், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர்கள் மற்றும் அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட150 பேர் கலந்து கொண்டனர்.


