• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எந்தெந்த ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் – தேர்தல் அலுவலர் விளக்கம்

policeseithitv by policeseithitv
April 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில்ராஜ் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி  வைத்த தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்களிக்க எந்தெந்த ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வாக்காளர் தகவல் சீட்டில், வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது. இதில் வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயர், தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் வைத்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது.
வாக்காளர்கள் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம்.
அதன்படி ஆதார் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப்புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண், தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,
மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Previous Post

தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருச்செந்தூரில் தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் எஸ்.பி கொடி அணிவகுப்பு

Next Post

2 செல்போன்களை கண்டெடுத்த பெண்ணுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டு

Next Post
2 செல்போன்களை கண்டெடுத்த பெண்ணுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டு

2 செல்போன்களை கண்டெடுத்த பெண்ணுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In