அண்ணாநகரில் 70 வயது மதிக்கத்தக்க வயதான நபரை அழைத்துச் சென்று சாலையை கடக்க உதவிய போக்குவரத்து பெண் காவலர் அனிதா என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்
அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் அனிதா என்பவர் 26.3.2021 அன்று காலை, அண்ணாநகர், ஐயப்பன் கோயில் சிக்னல் அருகில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 70 வயது மதிக்கத்தக்க வயதான நபர் ஐயப்பன் கோயிலிலிருந்து எதிர்புறம் செல்வதற்காக சாலையை கடக்க முயன்று மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தபோது அந்த வயதான நபரின் அருகில் போக்குவரத்தை நிறுத்தி, பெரியவரின் கையை பிடித்து சாலையை கடக்க உதவி செய்தார். பின்னர் பெரியவர், பெண் காவலருக்கு நன்றி தெரிவித்து சென்றார்.
மேற்படி,70 வயது மதிக்கத்தக்க பெரியவரை அழைத்துச் சென்று சாலையை கடக்க உதவிய போக்குவரத்து பெண் காவலர் அனிதாவை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

