திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் உமாதேவன், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் தேர்போகி பாண்டி, சிவகங்கைத் தொகுதியில் போட்டியிடும் அன்பரசன், இளையான்குடி தொகுதியில் போட்டியிடும் மாரியப்பன்கென்னடி, ஆகியோரை ஆதரித்து திருப்பத்தூர், தேவகோட்டை, காளையார்கோவில், இளையான்குடி, ஆகிய பகுதிகளில் டி.டி.வி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில் தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்க தவியாய் தவிக்கிறது 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் எனக்கூறும் திமுக தபால் வாக்கு பெற காவலர்களுக்கு ரூ 2000 கொடுத்து அவர்களை பணி நீக்கத்திற்கு காரணம் ஆகிவிட்டார்கள் இதன் மூலம் திமுகவிற்கு தேர்தல் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆளுங்கட்சி தலைமையில் கூட்டணி பணத்தை மட்டும் நம்பியே தேர்தலை சந்திக்கிறது துரோகி என்று சொன்னதற்கு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பழனிச்சாமியை பல்லி பாம்பு என்று சொல்லவில்லை நீங்கள் பச்சோந்தி என்றும் எனது பெயர் பழனிச்சாமி இல்லை பொய் சாமி என்றும் கூட கூறுவார் என விமர்சித்தார் சட்ட அமைச்சரை நிதானமாகப் பேசுங்கள் என்று கூறியதை தவறாக புரிந்து கொண்டு என்மீது வழக்கு போட்டுள்ளனர் வழக்கு விசாரணைக்கு வரும்போது புகார் கொடுத்தவர்கள் எங்கு இருப்பார்கள் என்று யாருக்கு தெரியும் எல்லாம் கடவுளுக்கு தான் தெரியும் பணம் படுத்தும் பாடு இருக்கே பதவி, அதிகார மமதையால் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார் இதில் அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்


