தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்ற கமேண்டோ பயிற்சி நிறைவிழாவில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் தமிழ்நாடு காவல்துறை தென்மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்தைச் சேரந்த ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போலீசார் மொத்தம் 82 பேர் கலந்து கொண்ட 8 வார கால கமேண்டோ பயிற்சி கடந்த 01.02.2021 அன்று தொடங்கி இன்று (27.03.2021) நிறைவுபெற்றது.
இந்த நிறைவு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் சுயமாக பொதுமக்களுக்கு உதவி செய்ய கூடிய வாய்ப்பு காவல்துறையில் அதிகமாக உள்ளது. இந்த துறையில் நீங்கள் பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியதாகும் என்றும், நீங்கள் வருங்காலங்களில் பல்வேறு பதவி உயர்வுகள் பெற்று காவல்துறையில் உயர்ந்த அதிகாரிகளாக வரவேண்டும் என்றும் பயிற்சி பெற்ற காவலர்களை ஊக்குவித்து சிறப்பரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் திரு. லேம்கான், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், கமாண்டோ பயிற்சி ஆசிரியர்களான உதவி ஆய்வாளர் திரு. குமார், தலைமைக்காவலர்கள் திரு. புஷ்பராஜ், திரு. பிரதீப் குமார், திரு. சார்லஸ், திரு. அன்பு முருகன், திரு. ராஜன், திரு. விஸ்வநாதன், திரு. முனியசாமி, திரு. கார்த்தி, திரு. ரியாஷ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.


