தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. பெண்கள், மாணவிகள், ஆர்வத்துடன் செல்பி.. அசத்தும் அமைச்சர் கீதா ஜீவன் !
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார்.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களிடம் வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார்.தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில்காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் கீதா ஜீவனுடன் வாக்கிங் செல்லும் பெண்கள், மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி.. எடுத்து கொண்டு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பொதுவாக தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சியினர் அனைவரையும் சந்தித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபடுவதுவழக்கம் ஆனால் தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் அதிகாலை நடைப்பயிற்சி (Morning Walk) மேற்கொள்ளும் வாக்காளர்களைக் நேரில் பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இது வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்கவும், சுறுசுறுப்பான சூழலில் பிரச்சாரம் செய்யவும் உதவும் ஒரு உத்தியாகும். அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் மரிய ஆன்ஸ், கவுன்சிலா் எடின்டா, காங்கிரஸ் வட்டத்தலைவர் மோகன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
