தூத்துக்குடி,
மார்ச், 13
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் பிரத்தியங்கிராதேவி காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா காலபைரவருக்கு அமாவாசை, தேய்பிறை அஷ்டமி தோறும் வருகிறது.
இதன்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா காலபைரவருக்கு மஹா யாக வழிபாடுகள் நடந்தது. சவுதிஅரேபியா, ஈரான், இஸ்ரேல் பகுதிகளில் நிலவிவரும் யுத்தம் முடிவுக்கு வந்திடவும், உலகில் எங்கும் யுத்தம் இல்லாத நிலை வேண்டியும், தமிழகத்தில் பருவமழை சிறக்கவும் வேண்டி மஹா யாகம் மற்றும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட 21வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை சித்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

